Monday, May 9, 2022

கவிதை - இனிய காலை

 இனிய காலை


நற்காலை இனிதேவிடிந்தது

வெளிச்சமோ இருளைகிழித்து

விருட்டென வெளிவந்தது 

கதிரவன் கதிர்கள் 

கிழக்கே முளைக்கலாச்சு.


பறவையினம் சிறகெடுத்தது

கரவைதாமும் குரல்கொடுத்தது 

மலரினங்கள் சிரித்தன

இயற்கையின் இளமை 

அழகாக புலர்ந்தது 


No comments:

Post a Comment